திருப்பத்தூர் அருகே - கோழி பண்ணையில் தீ விபத்து :

திருப்பத்தூர் அருகே -  கோழி பண்ணையில் தீ விபத்து :
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

திருப்பத்தூர் மாவட்டம் சின்னகந்திலி அடுத்த கொட்டா கொள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது (47). இவர், அதேபகுதியில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்.இவர் தனது பண்ணையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை பராமரித்துவருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் ஊழியர்கள் பணி முடிந்து வீடு திரும்பினர். அதன் பிறகுசிறிது நேரத்தில் பண்ணையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள்ளாக பண்ணை முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதில், பண்ணையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

அதன்பிறகு அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீ யை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இது குறித்து கந்திலி காவல் நிலையத்தில் மாது புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in