

தமிழக காவல்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டப்பணிகள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி தென்காசியில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவல கத்தில் பேரணியை ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார். பழைய பேருந்து நிலையம், யானைப்பாலம், மேலகரம் வழியாக குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் பேரணி நிறைவ டைந்தது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்க திட்ட இயக்குநர் விஜயலெட்சுமி, தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ் ணன், உதவி திட்ட அலுவலர் சிவக்குமார், காவல்துறையினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி