வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை இரண்டாம்கட்ட பயிற்சி :

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு  நாளை இரண்டாம்கட்ட பயிற்சி :
Updated on
1 min read

சங்கரன்கோவில் (தனி), வாசுதேவ நல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9,043 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.

வாக்குச்சாவடி அலுவலர்களுக் கான இரண்டாவது பயிற்சி வகுப்பு தென்காசி தொகுதிக்கு தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சங்கரன்கோவில் தொகுதிக்கு சங்கரன்கோவில்  கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வாசுதேவநல்லூர் தொகுதிக்கு புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், கடையநல்லூர் தொகுதிக்கு ஆய்க்குடி சாலையில் அமைந்துள்ள ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆலங்குளம் தொகுதிக்கு அத்தியூத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும் நாளை (26-ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in