திருப்பூர் அருகே பெருமாநல்லூர் அருகே - லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 4 பேர் உயிரிழப்பு :

திருப்பூர் அருகே பெருமாநல்லூர் அருகே -  லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 4 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூர் அருகே பழுதாகி நின்ற லாரிமீது இருசக்கர வாகனம் மோதி 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே பூலுவபட்டியைச் சேர்ந்தசபரி பாலமுருகன் (25), செட்டிபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (24), ஆனந்த் (25), பாண்டியன் நகர் பாலமுருகன் (23) ஆகியோர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இவர்கள் நேற்று அதிகாலை ஒரே இருசக்கர வாகனத்தில் பெருமாநல்லூர் - கோவை நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.

ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபட்டி அருகே, ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி, சாலையோரம் நின்றுகொண்டிருந்தது. பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த சீதி லாரியை ஒட்டிவந்துள்ளார்.

இந்நிலையில் நால்வரும் வந்த இருசக்கர வாகனம் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில்பலத்த காயமடைந்த சபரி பாலமுருகன், பிரவீன் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்து திருப்பூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலமுருகன், ஆனந்த் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in