தாமரைக்கரை, ஊசிமலைப் பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு :

தாமரைக்கரை, ஊசிமலைப் பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு :
Updated on
1 min read

அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தாமரைக் கரை மற்றும் பர்கூர் ஊசிமலைப் பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும்படை மற்றும் 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட் பட்ட தாமரைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் குடிநீர், மின் சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் சி.கதிரவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பர்கூர் ஊசிமலைப் பகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நிலை கண் காணிப்புப் குழுவினர், வாகன பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டார். ஆய்வின் போது, அந்தியூர் தேர்தல் நடத்தும் அலு வலர் இளங்கோவன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வீரலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in