ஈரோட்டில் 530 பவுன் நகை பறிமுதல் :

ஈரோட்டில் 530 பவுன் நகை பறிமுதல்  :
Updated on
1 min read

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட, 530 பவுன் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மூலப் பாளையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை சோதனையிட்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி 530 பவுன் நகைகளை கொண்டு வந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தனியார் நிதி நிறுவனத்தின் அலுவலர்கள் என்பது தெரியவந்தது. அவர்க ளிடம் நகைகளை எடுத்துச் செல்லத் தேவையான ஆவணங்கள் இல்லாததால், 530 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in