சத்தியமங்கலம், அந்தியூர் தொகுதியில் - வாகன சோதனையில் ரூ.6.41 லட்சம் பறிமுதல் :

சத்தியமங்கலம், அந்தியூர் தொகுதியில்   -  வாகன சோதனையில் ரூ.6.41 லட்சம் பறிமுதல் :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அந்தியூர் தொகுதியில் நேற்று பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.6.41 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுவினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துவரும் ரொக்கம் மற்றும் தங்கம்,பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். சத்தியமங்கலம் தொகுதியில் நேற்று நடந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.5.5 லட்சமும், அந்தியூர் தொகுதியில் ரூ.91ஆயிரமும் பறிமுதல் செய்யப் பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இதுவரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடியே37 லட்சத்து 51 ஆயிரத்து 980பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில், ரூ.41 லட்சத்து 66 ஆயிரத்து 840 விடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.95.85 லட்சம் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது, என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in