‘ஆழித்தேரோட்டத்துக்கு : முதியவர்கள், சிறுவர்கள்வருவதை தவிர்க்கவும்’ :

‘ஆழித்தேரோட்டத்துக்கு : முதியவர்கள், சிறுவர்கள்வருவதை தவிர்க்கவும்’ :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளது: திரு வாரூர் தியாகராஜர் கோயிலில் மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ள ஆழித்தேரோட்ட விழா வைக் காணவரும் பக்தர்கள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

அதேபோன்று அனைவரும் கை சுத்தம், தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 60 வயதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரோட்ட விழாவில் பங்கேற் பதையும், 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளை அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும். மேலும், இருமல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் தேரோட்ட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். கரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால், அதிகமான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in