காட்டுப்பள்ளியில் தொழிலாளர் உயிரிழப்பு :

காட்டுப்பள்ளியில் தொழிலாளர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் நிறுவனத்தில் மேற்குவங்க மாநிலம், அசுதியா கிராமத்தைச் சேர்ந்த சுதிப் மெய்தி என்பவர் கிரேன் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் கிரேன் திடீரென பழுதடைந்ததால், லிஃப்டில் ஏறி 18 அடி உயரம் கொண்ட கிரேனில் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக லிஃப்டில் இருந்து சுதிப் மெய்தி தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சுதிப் மெய்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து, சுதிப்பின் சகோதரர் சஞ்சய் மெய்தி அளித்த புகாரின்பேரில், காட்டுப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in