

கும்மிடிப்பூண்டியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்புக் கழிவுகளுடன் வந்த 7 டன் எடை கொண்ட வெடிகுண்டுகள், ராணுவ அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அழிக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இரும்பு உருக்கு ஆலை சிலவற்றுக்கு, கடந்த 13ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து பழைய இரும்புகள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் ஈரான், ஈராக் போரின்போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பல வெடிப்பொருட்களும் கலந்து வந்திருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி 7 டன் எடை கொண்ட 1,628 வெடிப் பொருட்களை ஒரு தொழிற்சாலையில் பத்திரமாக சேமித்து வைத்தனர்.
ராணுவ டிராக்டர்கள்