பார் கவுன்சில் தேர்வு முடிவு விரைவில் வெளியீடு :

பார் கவுன்சில் தேர்வு முடிவு விரைவில் வெளியீடு :
Updated on
1 min read

அகில இந்திய பார் கவுன்சில் தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் படிப்பை முடித்த பட்டதாரிகள் வழக்கறிஞராகப் பணியாற்ற அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் (ஏஐபிஇ) வெற்றிபெறவேண்டும். இத்தேர்வை இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, ஏஐபிஇ - 15 தேர்வு கடந்த ஜன.24-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமான சட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் தேர்வை எழுதினர். தேர்வுக்கான விடைக்குறிப்பு ஜன.30-ம்தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஏஐபிஇ-15 தேர்வு முடிவு மார்ச் 3-வது வாரத்தில்வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை https://allindiabarexamination.com/ என்ற இணையதளத்தில் காணலாம் என்று ஏஐபிஇ குறிப்பிட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in