விபத்தில் முதியவர் உயிரிழப்பு :

விபத்தில் முதியவர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கருப்பனூரைச் சேர்ந்தவர் அப்பாத்துரை (60). விவசாயியான இவர், தனது மனைவி ரதி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஆலங்குளத்துக்கு சென்றார். அங்கு, சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் அப்பாத்துரை பலத்தகாயமடைந்தார். ரதி லேசான காயத்துடன் தப்பினார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பாத்துரை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in