

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் முருகசெல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர்அமைச்சர் கூறும்போது, “தமிழகமுதல்வர் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். சங்கரன்கோவில் தொகுதியில் மக்களுக்கு பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
சங்கரன்கோவில் தொகுதி திமுகவேட்பாளர் ராஜா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரகுமாரி, பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர் பாலமுருகேசன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பூல்பாண்டி மனு தாக்கல் செய்தார்.
வாசுதேவநல்லூர்
மதிமுகவைச் சேர்ந்த டாக்டர் சதன் திருமலைக் குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதால் திமுக வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
கடையநல்லூர்
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும் சேர்த்து நேற்று ஒரே நாளில் மொத்தம் 20 வேட்பாளர்கள் 23 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், ஆலங்குளம் தொகுதிபனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி ஆகியோர் கூடுதலாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.