‘பொக்லைன்’ உரிமையாளரிடம் ரூ.92 ஆயிரம் பணம் பறிமுதல் :

‘பொக்லைன்’ உரிமையாளரிடம் ரூ.92 ஆயிரம் பணம் பறிமுதல் :
Updated on
1 min read

வேட்டவலம் அருகே ‘பொக்லைன்’ உரிமை யாளரிடம் ரூ.92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் பரிதிமால் கலைஞன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அவ் வழியாகச் சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

விசாரணையில், அவர் சின்ன ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ‘பொக்லைன்’ உரிமை யாளர் அங்குசாமி என்று தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் ரூ.92 ஆயிரம் பணம் இருந்தது.

பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அதிகாரிகள் குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

‘பொக்லைன்’ இயந்திரத்துக்கு டயர் வாங்க பணம் வைத்திருந்ததாக அவர் கூறியதை அதி காரிகள் ஏற்க மறுத்து உதவி தேர்தல் அலுவலர் வைதேகியிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in