சேலம் சிறையில் கைதி தற்கொலை முயற்சி :

சேலம் சிறையில் கைதி தற்கொலை முயற்சி :
Updated on
1 min read

சேலம் மத்திய சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கைதியை காவலர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருட்டு வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய சோதனையில் சிம்கார்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை தனிமை சிறையில் அடைத்து, செல்போனை எங்கு பதுக்கி வைத்துள்ளார் என விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை ராஜ்குமார் சிறை கம்பியில் துண்டால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த சிறை காவலர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in