போலி டிக்கெட் பரிசோதகர் கைது :

போலி டிக்கெட் பரிசோதகர் கைது  :
Updated on
1 min read

விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு அரசுப் பேருந்து நேற்று சென்றது. சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தில் ஏறிய ஒருவர், பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அதே பேருந்தில், டிக்கெட் பரிசோதகர் வெங்கடேசன் என்பவர் ஏறி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்ய முயன்றார். அந்த சமயத்தில், தனக்கு முன்பாக பேருந்தில் ஏறி டிக்கெட் பரிசோதனை செய்தவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை பிடித்து போக்குவரத்து ஊழியர்கள் விசாரித்தனர். அதில் அவர், ஆரணி கொசப்பாளையம் பகுதியில் வசிக்கும் இளங்கோ (51) என்பதும், இவர் போலிடிக்கெட் பரிசோதகர் என்பதும்தெரியவந்தது. இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளங்கோவை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in