குழந்தை திருமண தடைச் சட்டத்தில் புளியங்குடி இளைஞர் கைது :

குழந்தை திருமண தடைச் சட்டத்தில் புளியங்குடி இளைஞர் கைது :
Updated on
1 min read

புளியங்குடி அருகே உள்ள கரிசல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிங்கத்துரை(31). இவருக்கு கடந்த மாதம் 15-ம் தேதி குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மணமகள் திருமண வயதை எட்டவில்லை என்பதும், அவருக்கு 15 வயது மட்டுமே ஆகியிருப்பதும் சமூகநல விரிவாக்க அலுவலர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து புளியங்குடி காவல் நிலையத்தில் வாசுதேவநல்லூர் சமூகநல விரிவாக்க அலுவலர் குருபாக்கியம் புகார் அளித்தார். அதன்பேரில், குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சிங்கத்துரையை கைது செய்தனர். மேலும், திருமணத்தை நடத்தி வைத்த சிங்கத்துரையின் தந்தை முருகன், தாய் புதியவள், மணமகளின் தந்தை வெங்கையன், தாய் முத்துலெட்சுமி, உறவினர்கள் நாகமணி, சின்னத்துரை, மாரியம்மாள் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணமகள் திருமண வயதை எட்டவில்லை என சமூகநல விரிவாக்க அலுவலர்களுக்கு தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in