கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது :

கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது  :
Updated on
1 min read

அவிநாசி அருகே பெரியாயிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவிநாசி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெரியாயிபாளையம் அரசுப் பள்ளி எதிரே கையில் கத்தி மற்றும் போதைப் பொருட்களுடன் அமர்ந்து வீட்டில் நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்க 5 பேர் திட்டமிட்டு கொண்டிருந்தனர். இதையறிந்த போலீஸார், அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், திருப்பூர் அனுப்பர்பாளையம் பெரியார் காலனி ரவீந்தரன் மகன் விக்னேஷ் (27), திண்டுக்கல் ரெட்டியார்செட்டிபுரம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்லதுரை(35), பெருமாநல்லூர் பொங்குபாளையம், மாரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் விக்னேஷ் (20). பெரியாயிபாளையம் ஜீவா நகர், கருப்பசாமி காம்பவுன்ட் பகுதியைச் சேர்ந்த உஸ்மான் மகன் சலீம் (20), அவிநாசி விஸ்வபாரதி பார்க் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் மகன் ரிஷிக்குமார் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 கிராம் கஞ்சா, கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in