பாபநாசம், நெல்லையில் சிவராத்திரி விழா :

பாபநாசம், நெல்லையில் சிவராத்திரி விழா :
Updated on
1 min read

பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாச சுவாமி திருக்கோயிலில் 49-வது சிவராத்திரி விழா அம்பாள் சந்நிதி முன் நடைபெற்றது. பேராசிரியர் மீ.முருகலிங்கம் தலைமை வகித்தார். பிரிலியண்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் பாரதி கண்ணன் வரவேற்றார்.

திருஞானசம்பந்தர் சிறப்புகள் குறித்து வி.கே.புரம் வாசகர் வட்ட தலைவர் ப. இளங்கோ, திருநாவுக்கரசர் குறித்து சிவப்பிரகாசர் நற்பணி மன்ற செயலாளர் கோ. கணபதி சுப்பிரமணியன் உரையாற்றினர்.

இதுபோல திருநெல்வேலியில் பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் மூன்று ஜோதிர்லிங்க தரிசன நிகழ்வு சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்றது. பிரம்மகுமாரிகள் அமைப்பின் பொறுப்பாளர் ராஜ யோகினி புவனேஸ்வரி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சிவபாலன் வரவேற்றார்.

மூன்று ஜோதிர்லிங்க தரிசன நிகழ்வை பன்னாட்டு மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் கணபதி சுப்பிர மணியன் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in