அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி - இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி :

அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி -  இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி :
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் உதகை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் திட்டப் பணியாளர்களின் இருசக்கர வாகனப் பேரணி பிங்கர்போஸ்ட்டில் நடந்தது.

பின்னர், கடந்த தேர்தலின் போது குறைவான வாக்குப்பதிவுகள் பதிவான வாக்குச்சாவடி அருகில் உள்ள வாக்காளர்களிடையே நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தல் முக்கோணம் பகுதியில் 14 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கோலப்போட்டி நடந்தது.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே நேரு யுவகேந்திரா மூலம் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, ஆட்டோக்களில் ‘கறை நல்லது’ என்ற விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டினார்.

பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இப்பேருந்து நிலையப் பகுதியில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கத்தில் ஆட்சியர் கையெழுத்திட்டார்.

மீடியா மையத்தில் ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in