விபத்தில் ஒருவர் உயிரிழப்பு :

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (42). இவர், தனது மகன் அபிஷேக் (10) உடன் மகா சிவராத்திரியை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் முக்கூடல் பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு, நேற்று அதிகாலை ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தார். அடைக்கலப்பட்டணம் அருகே சென்றபோது, சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மீனாட்சிசுந்தரம் உயிரிழந்தார். காயம் அடைந்த அவரது மகன் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in