பழநி முருகன் கோயிலுக்கு தேவையான - கரும்புச் சர்க்கரை நாளை கொள்முதல் :

பழநி முருகன் கோயிலுக்கு தேவையான  -  கரும்புச் சர்க்கரை நாளை கொள்முதல்  :
Updated on
1 min read

ஈரோடு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பழநி முருகன் கோயிலுக்குத் தேவையான நாட்டுச் சர்க்கரை நாளை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்குத் தேவையான நாட்டுச் சர்க்கரை, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பழநி கோயில் பிரசாதத்திற்கு தங்களது கரும்புச் சர்க்கரை செல்வதால், இப்பகுதி விவசாயிகள், சிரத்தையுடன் சர்க்கரை தயாரித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, பிரசாதம் தயாரிக்க பழநி தேவஸ்தானம் கரும்புச் சர்க்கரையை கொள்முதல் செய்து வருகிறது.

இந்நிலையில், நாளை (13-ம் தேதி) பழநி தேவஸ்தானம் சார்பில் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. எனவே, விவசாயிகள் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வருமாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in