விழுப்புரத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி :

விழுப்புரம் நகராட்சி சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரம் நகராட்சி சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் 1000-த்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி அரசு கலைக்கல்லூரியில் நிறைவடைந்தது.

எஸ்பி.ராதாகிருஷ்ணன், ஏடிஎஸ்பி தேவநாதன், டிஎஸ்பி நல்லசிவம், துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, உதவி இயக்குநர் (பயிற்சி) சூர்யா, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in