நீலகிரியில் தொகுதிகளை கண்காணிக்க - 5 பார்வையாளர்கள் நியமனம் :

நீலகிரியில் தொகுதிகளை கண்காணிக்க -  5 பார்வையாளர்கள் நியமனம் :
Updated on
1 min read

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் தொடர்பான செலவுகளை கண்காணிக்க, இந்திய தேர்தல் ஆணையத்தால் இரண்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை சட்டப்பேரவை தொகுதிக்கு விசால் எம்.சனப், கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அமர்சிங்நெகரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை (இன்று) நீலகிரிக்கு வருகின்றனர்.

அதேபோல, உதகை சட்டப்பேரவை தொகுதிக்கு பெனுதர்பகேரா, கூடலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ராகுல்தி வாரி மற்றும் குன்னூர் சட்டப்பேரவை தொகுதிக்கு சௌரவ்பஹாரி ஆகிய 3 பொதுப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் முடிவதற்கு முன்பாக வருவார்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in