மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் - பல்லடம் தொகுதி எம்எல்ஏ ஆதரவாளர்கள் மறியல் :

பல்லடம் பேருந்து நிலையம் எதிரே நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட தற்போதைய சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் ஆதரவாளர்கள்.
பல்லடம் பேருந்து நிலையம் எதிரே நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட தற்போதைய சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் ஆதரவாளர்கள்.
Updated on
1 min read

பல்லடம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் நடராஜன். இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில், திருப்பூர் வடக்கு,திருப்பூர் தெற்கு, உடுமலைப் பேட்டை, அவிநாசி ஆகிய தொகுதிகளில் கடந்த முறை வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, பல்லடம் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்லடம் தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ. நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கோரி, அவரது ஆதரவாளர்கள் பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை, பல்லடம் போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in