கடலூரில் லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர், உதவியாளர் கைது :

கடலூரில் லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர், உதவியாளர் கைது :
Updated on
1 min read

கடலூரில் பத்திரத்தில் பிழை திருத்த லஞ்சம் கேட்ட இணை சார் பதிவாளர், உதவியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் தனது பத்திரத்தில் உள்ள பிழையை திருத்தித் தர வேண்டும் என்று திருப்பாதிரிபுலியூரில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-க்கு சென்றார். இதுகுறித்து இணைசார் பதிவாளர் பூசைதுறை மற்றும் உதவியாளர் செல்வம் ஆகியோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் ரூ. 5 ஆயிரம் தந்தால் பத்திரத்தில் உள்ள பிழை திருத்தித் தரப்படும் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ஞானசேகரன் கடலூரில் உள்ள மாவட்ட ஊழல்தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் செய்துள்ளார். லஞ்சஒழிப்பு போலீஸார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை ஞானசேகரனிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் ஞாசேகரன் இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-க்கு சென்றார். அங்கிருந்த உதவியாளர் செல்வத்திடம் ரூ. 5 ஆயிரத்தை தந்துள்ளார். உதவியாளர் செல்வம் அந்த பணத்தை இணை சார்பதிவாளர் பூசைதுரையிடம் அளித்துள்ளார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மெல்வின் ராஜாசிங் தலைமையிலான போலீஸார் 2 பேரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in