காணொலிக் காட்சி மூலம் - தேனியில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் திறப்பு :

காணொலிக் காட்சி மூலம்  -  தேனியில் கூடுதல்  மகளிர் நீதிமன்றம் திறப்பு :
Updated on
1 min read

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் (மகிளா கோர்ட்) திறப்பு விழா காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜயா வரவேற்றார். ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, குடும்பநல நீதி மன்ற நீதிபதி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், சந்திரசேகரன் ஆகியோர் தேனி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தைத் திறந்து வைத்தனர்.

தேனி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, கூடுதல் அரசு வழக்கறிஞர் வெள்ளைச் சாமி கலந்து கொண்டனர். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுந்தரம் நன்றி கூறினார். இங்கு குடும்ப பிரச்சினை வழக்கு கள் விசாரிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in