சாக்கு கடையில் தீ விபத்து :

சாக்கு கடையில் தீ விபத்து  :
Updated on
1 min read

திருப்பூர் செரீப் காலனியை அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (48). இவர், அதே பகுதியில் சாக்கு கடை நடத்தி வருகிறார். கடையின்மேற்கூரை, நேற்று மதியம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. மள மளவென சாக்குகளுக்கும் தீப்பற்றியதால், கடை முழுவதும் எரியத் தொடங்கியது. தீயை அணைக்கும் பணியில் அங்கிருந்த மக்கள் ஈடுபட்டாலும், கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வாகனம் உரிய நேரத்தில் வராததால், சுமார் 1 மணி நேரம் பொதுமக்களின் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் ரூ.1லட்சம் மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in