இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் :

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் மத வழிபாட்டுக் கட்டிடத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில்அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச்செயலாளர் கிஷோர்குமார் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் கள் பேசும்போது, "அவிநாசி - மங்கலம் சாலையில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தைமுறைகேடாக அபகரித்து, எந்தவித அனுமதியும் பெறாமல் மத வழிபாட்டுக்கட்டிடம் அமைப்பதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு கட்டிடத்தை உடனே இடித்து, மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்து மக்களின் போக்கு வரத்து பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.

மேலும், இதனை கண்டுகொள்ளாத வருவாய் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தையும், நூற்றாண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமுதாயங்களை சார்ந்த சமூகத்தினர் தேர்த் திருவிழா காலங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கும் 10-க்கு மேற்பட்ட மடங்கள் மற்றும் கோயில்கள் இடிக்கப்பட்டதையும் கண்டிக்கிறோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in