திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் - பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தொடக்கம் :

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் -  பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தொடக்கம் :
Updated on
1 min read

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூரில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை 7.30 மணியளவில் மலர்கள், தங்க, வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தீர்த்தீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி உள்ளிட்ட சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வரும் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்பிரம்மோற்சவத்தில் நாள்தோறும் காலை, மாலையில் பூத வாகனம், மயில் வாகனம், புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் தீர்த்தீஸ்வரர் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 11-ம் தேதி இரவு மகா சிவராத்திரியும், 13-ம் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி தரிசனமும், 16-ம் தேதி இரவு திருக்கல்யாணமும், 18-ம் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in