பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

டீசல்  விலை உயர்வை கண்டித்து  வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள்  பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: மு.லெட்சுமி அருண்
டீசல் விலை உயர்வை கண்டித்து வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பாளையங் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு சித்த மருத்துவ கல்லூரி எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நல முன்னேற்ற சங்கத் தலைவர் சி.சந்தோஷம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஏ.துரை தலைமை வகித்தனர்.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். சொந்த கார் களை வாடகைக்கு இயக்கும் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் அவற்றில் பயணம் செய்யும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in