பல்லடம் அருகே கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது :

பல்லடம் அருகே கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது :
Updated on
1 min read

பல்லடம் அருகே காட்டூர் கரப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (52). இவர், ஒன்றரை ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு வந்துள்ளார்.

தோட்டத்துக்குள் தனியாக கஞ்சா செடியும் பயிரிட்டு வருவதாக அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில், காமநாயக்கன்பாளையம் போலீஸார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்துவருவது தெரியவந்தது. அவரிடம்இருந்து 4 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறிய அளவில் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டு வந்தது, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in