விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு :

விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு :
Updated on
1 min read

கீழமை நீதிமன்றங்களில் உள்ளவழக்கறிஞர்கள் அறை மற்றும் நூலகம் ஆகியவற்றை திறக்க வேண்டும். நீதிபதிகள், வழக்கறி ஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழக்கறிஞர்களை தவிர மற்ற வழக்கறிஞர்கள் சென்னை நீதிமன்றத்தில் வந்து வழக்காட தடை விதிக்கப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைகள் அனைத்தும் காணொலி காட்சி மூலம்தான்நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்று கோரி நேற்று தமிழகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, வானூர் ஆகிய நீதி மன்றங்களில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக் கணிப்பில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in