வாக்குரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :

வாக்குரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  :
Updated on
1 min read

நூறு சதவீத வாக்குப்பதிவு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாளையங்கோட்டையில் நேற்று சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து பேரணியை ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கிவைத்து பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்மற்றும் தன்னார்வலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் நாங்குநேரி செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் தேர்தல் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியில் வாக்களிப்பது தொடர்பான பயிற்சி முதன்முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)எம்.கணேஷ்குமார், (தேர்தல் பிரிவு) என்.சாந்தி, வட்டாட்சியர்கள் கந்தப்பன், பகவதிபெருமாள், செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in