100 சதவீத வாக்குப்பதிவுக்காக - தி.மலை அறிவியல் பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு

திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக சிலம்பம் சுழற்றி, பார்வையாளர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக சிலம்பம் சுழற்றி, பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள அறிவியல் பூங்காவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். சிலம்பம், பள்ளி மாணவர்களின் நடனம், இசைக் குழுவின் இசை நிகழ்ச்சிகள் மூலமாக அறிவியல் பூங்காவுக்கு வருகை தந்த பார்வையாளர்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், செல்பி புகைப்பட சாவடியை திறந்து வைத்த ஆட்சியர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்கை உறுதி செய்யும் விவிபேட் மூலமாக வாக்குப்பதிவு குறித்த செயல்விளக்கம் அளித்தார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல், துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதா பேகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, வாக்கு எண்ணும் மையம் அமைக்க, திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in