திருக்கோவிலூர் வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு :

திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.
Updated on
1 min read

திருவெண்ணெய்நல்லூர் வட் டார வளர்ச்சி அலுவலகம், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட் சியர் அலுவலகம் மற்றும் திருக்

கோவிலூர் வருவாய் வட்டாட்சி யர் அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று ஆலோ சனை மேற்கொண்டார்.

தொடர்ந்து திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருக் கோவிலூர் அங்கவை சங்கவைஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர் தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அடிப்படை வசதி களான மின்வசதி, குடிநீர் வசதிமற்றும் வாக்குச்சாவடி முகவர் களுக்காக அமைக்கப்பட்டு வரும்இருக்கை வசதிகளை பா்ர்வை யிட்டார்.

பாதுகாப்பு தடுப்புக் கட் டைகள், நாற்காலிகள், சாய்வுதளங்கள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்தினி, டிஎஸ்பி ராஜீ, வட்டாட்சியர் சிவசங்கரன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in