

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல்நடத்தை விதிமுறை மீறல்களை கண்காணிக்க 6 தொகுதிகளிலும் மொத்தம் 18 பறக்கும் படை குழுக்கள், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 12 வீடியோகண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நத்தம் நிலவரித் திட்ட வட்டாட்சியர் நம்பிராயர் தலைமையிலான வைகுண்டம் தொகுதிக்கான நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு செய்துங்கநல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது திருநெல்வேலியில் இருந்துவந்தகாரை வழிமறித்து சோதனை செய்தனர். காரில் இருந்த மதபோதகர் மோகன் சி.லாசரஸிடம் ரூ.1.20 லட்சம் பணம் இருந்தது. ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, வைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருச்செந்தூர்
மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.7,01,190 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்
அம்மாண்டிவிளை சந்திப்பில் நேற்றுமுன்தினம் இரவு கேரளாவில் இருந்து வந்தமீன்லாரியை பறக்கும்படை போலீஸார் சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சம்கணக்கில் வராத பணம் இருந்தது. உரியஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்கில் வராதபணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை வாகன சோதனை நடந்து வருகிறது.