திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் :

திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் :
Updated on
1 min read

அரியலூர் நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோயில் கும்பா பிஷேகம் நேற்று நடை பெற்றது.

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை யாகசாலையிலிருந்து புனிதநீர் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், விநாயகர், திரவுபதி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in