வேனில் கடத்தப்பட்ட 2.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

வேனில் கடத்தப்பட்ட 2.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :
Updated on
1 min read

சிவகாசி சுற்று வட்டாரப் பகுதி யில் இருந்து, விருதுநகருக்கு சிலர் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக, மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து ஆமத்தூர் அருகே இன்ஸ்பெக்டர் பிரியா, எஸ்.ஐ. அசோக், காவலர் கள் ரஞ்சன்குமார், சந்திரன் ஆகியோர் நேற்று காலை வாகனச் சோதனை நடத்தினர்.

அப்போது, சிவகாசியி லிருந்து விருதுநகர் வந்த மினி வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, வேனில் வந்த விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (31), சங்கரவேல் (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட 50 முட்டைகளில் இருந்த 2.50 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in