

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தெய்வச்செயல்புரம், கீழத்தட்டப்பாறை மற்றும் மேலத்தட்டப்பாறை பகுதிகளில் உள்ள வெடிமருந்து கிடங்குகளில் எஸ்பி ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், சாயர்புரம் அருகே சிவலூரில் உள்ள வெடிமருந்து விற்பனை கிடங்கு மற்றும் வைகுண்டம் அருகே பத்மநாபமங்கலம் பகுதியில் உள்ள வெடிமருந்து விற்பனை கிடங்கு ஆகியவற்றை எஸ்.பி. ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார். வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், ஏரல் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா உடனிருந்தனர்.