தீ விபத்தில் : சிறுமி உயிரிழப்பு :

தீ விபத்தில் : சிறுமி உயிரிழப்பு  :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் மாதா கோயில் தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவரது மகள் அரியதர்ஷினி(7). இவர், கடந்த மாதம் 27-ம் தேதி தீக்குச்சியை கொளுத்தியபோது, எதிர்பாராமல் அவரது ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக சிறுமியை அவரது உறவினர் கள் மீட்டு ஆரணி அரசு மருத் துவமனையில் அனு மதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இது குறித்து களம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in