

மரக்காணம் அருகே இளம் பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் இளை ஞருக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப் பட்டது.
மரக்காணத்தை அருகே உள்ள எம்.திருக்கனூரை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜீவ்காந்தி (24). இவருக்கு அப்பகுதியில் ஆடு மேய்க்கும் இளம் பெண்ணுடன் கடந்த 2012-ல் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக கூறி பழகியதால் அப்பெண் கர்ப்பம் அடைந்தார் ஆனால் அவரை ராஜீவ்காந்தி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
இதுகுறித்து அப்பெண், கோட் டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசா ரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனி டையே அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகும் ராஜீவ்காந்தி, அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் மன முடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நீதிபதி சாந்தி இவ்வழக்கில் ராஜீவ்காந்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இல்லையெனில் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதையடுத்து ராஜீவ்காந்தி கடலூர் மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.