திருச்சியில் 6-ம் தேதி மகா பஞ்சாயத்துக் கூட்டம் : விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு

திருச்சியில் 6-ம் தேதி மகா பஞ்சாயத்துக் கூட்டம்  :  விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு
Updated on
1 min read

வரும் 6-ம் தேதி திருச்சியில் மகா பஞ்சாயத்து கூட்டம் என்ற கூட்டத்தை நடத்த இருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும், என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் பி.கே‌.தெய்வசிகாமணி நாமக்கல்லில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

விவசாயிகள் எவ்வளவு போராட்டங்கள் நடத்தினா லும் அரசாங்கங்கள் கண்டு கொள்வது கிடையாது. எங்களைப் பொறுத்தவரை போராட்டங்களால் இனி வெற்றி பெற முடியாது என்று சோர்ந்து விட்டோம். இச் சூழ்நிலையில் வரும் தேர்தலில் வாக்குகளை போராட்ட ஆயுதமாக மாற்றுவதற்கான முடிவுகளை எடுத்து இருக்கிறோம். எங்களிடம் சில அரசியல் கட்சிகள் ஆதரவு கேட்டு பேசியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் விவசாயிகளுடைய பிரச் சினையை முற்றிலும் தீர்ப்பதற்கு வரும் 6-ம் தேதி திருச்சியில் மகா பஞ்சாயத்து கூட்டம் என்ற கூட்டத்தை நடத்த இருக்கிறோம். அந்தக் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in