நெல்லையில் செல்லபாண்டியன் சிலை மறைப்பு :

திருநெல்வேலியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் வண்ணார்பேட்டையில் உள்ள செல்லபாண்டியன் சிலையை மாநகராட்சி ஊழியர்கள் மூடினர்.படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் வண்ணார்பேட்டையில் உள்ள செல்லபாண்டியன் சிலையை மாநகராட்சி ஊழியர்கள் மூடினர்.படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள செல்லபாண்டியன் சிலையை மாநகராட்சி ஊழியர்கள் மறைத்தனர்.

தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் அரசியல் கட்சிகள் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி கள், விளம்பர பதாகைகள் அகற்றப் படுகின்றன. அரசு போக்குவரத்து கழக அலுவலகங்கள் முன் வைக்கப்பட்டுள்ள கட்சிகளின் தொழிற்சங்க அறிவிப்பு பலகைகளும் துணியால் மறைக்கப்பட்டன. அண்ணா, எம்ஜிஆர் சிலைகளும் துணியால் மறைக்கப்பட்டன. இந்நிலையில் வண்ணார்பேட்டையில் உள்ள சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்லபாண்டியன் சிலையை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அட்டைப்பெட்டிகளை வைத்து மூடி மறைத்தனர். பொது தேர்தல்களின்போது இச்சிலை மூடிவைக்கப்படுவதில்லை. தற்போது திடீரென்று மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in