டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து விருதுநகர்-வில்லிபுத்தூர் சாலையில் சந்திரகிரிபுரம் விலக்கு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து விருதுநகர்-வில்லிபுத்தூர் சாலையில் சந்திரகிரிபுரம் விலக்கு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமத்தில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரில் கோயில்கள் மற்றும் பள்ளிகள் உள்ள பகுதியில், புதிதாக டாஸ்மாக் கடை திறக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விருதுநகர் - வில்லிபுத்தூர் சாலையில் சந்திரகிரிபுரம் விலக்கு அருகில் விருதுநகர் அழகாபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் மற்றும் விருதுநகர் வட்டாட்சியர் சிவஜோதி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in