விருதுநகர் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் திடீர் ஆய்வு

விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு செய்த தேர்தல் அலுவலர் இரா. கண்ணன்.
விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு செய்த தேர்தல் அலுவலர் இரா. கண்ணன்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை, மாவட்டத் தேர்தல் அலுவலர் இரா.கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதி வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தேர்தல் அலுவலர் இரா.கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுழி தொகுதிகளில் உள்ள மையங்களில் ஆய்வு செய்யப்பட்டு, வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in