2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமையிலான வருவாய்த் துறையினர் கடந்த 2 நாட்களாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி ஜீவா நகர் பகுதியில் வருவாய்த் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது அங்கு பழுதாகி நின்றிருந்த மினி வேனை சோதனையிட்டனர். அதில், 42 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அரிசியுடன் மினி வேனை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் அரிசியை திருப்பத்தூர் நுகர் பொருள் வாணிபக் கிடங்கிலும், மினி வேனை திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திலும் ஒப்படைத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in