திண்டுக்கல்லில் வாகன சோதனையில் சிக்கிய கார் திருடன்

திண்டுக்கல்லில் வாகன சோதனையில்  சிக்கிய கார் திருடன்
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே வாகனச் சோதனையில் கார் திருட்டில் தொடர்புடையவர் சிக்கினார்.

தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந் துள்ளதால் போலீஸார் வாக னச் சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். திண்டுக்கல் அருகே நத்தம் சாலையில் உள்ள ரெட்டியபட்டியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட் டிருந்தனர்.

அந்த வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் இருந்த நபரிடம் காருக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.

போலீஸார் நடத்திய விசார ணையில் காரை ஓட்டி வந்தவர் மதுரையைச் சேர்ந்த பீமா என்ற சீமராஜா என்றும் அவர் மீது கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த வாரம்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் சத்திரப்பட்டி அருகே காரைத் திருடி வந்தபோது வாகனச்சோதனையில் சிக்கி யுள்ளார். அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in