தி.மலை மாவட்டத்தில் வாகன சோதனை

தி.மலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் நேற்று வாகனத்தை சோதனை  செய்த காவல் துறையினர்.
தி.மலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் நேற்று வாகனத்தை சோதனை செய்த காவல் துறையினர்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் வாகன சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. ரூ.50 ஆயிரத்துக்கும் கூடுதலாக, பணத்தை கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பில் பரிசு பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகன சோதனை நேற்று முன் தினம் இரவு முதல் தொடங்கியது.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வாகன சோதனை நடத்தப்படுகிறது. வாகனங்களை சோதனை செய்யும் போது, வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in