

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தின் 10-ம் நாள் உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த உற்சவத்தையொட்டி அம்மன் செண்பகப்பூ, மகிழம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் தினந்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் காலை மாலை இருவேளையும் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
அந்த வகையில் நேற்று 10-ம்நாள் உற்வசமாக செண்பக் பூ, மகிழம்பூ, மனோரஞ்சிதம், மல்லி உள்ளிட்ட மாலைகள் அணிந்து எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏகாம்பரநாதர் கோயிலில்..